Thursday 17 March, 2011

உயிர் பயத்தில் பரப்புரைக்காரர்

நண்பர் திடீர் தற்”கொலை  செய்து கொண்டதால் உள்ளே இருக்கும் பரப்புரைக்காரர் ரொம்பவே உயிர் பயத்தில் உள்ளாராம். தலைவரும் கட்சியும் கைவிட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டதால் என்ன செய்வது என்று விக்கித்து போய் உள்ளாராம். இந்நிலையில் டெல்லியில் கைகாட்டி நன்றி சொல்லும் தொழிலதிபரிடம் வேறு தொடர்புகள் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்ததை சின்னபையனுக்கு களவாணிகள் ரிப்போர்ட் சொல்லி உள்ளார்களாம்.


3 comments:

Unknown said...

தலைவா!

அம்மாவின் ஆசியால் தேர்தலின் முடிவு, என்னுடைய கணிப்பின் படி, நடந்துவிடும் போலத் தெரிகிறதே?

19-ம் தேதியன்று, நிலவுக்கும், பூமிக்கும் உள்ள தொலைவு, குறைகிறதாம்!

மாயாவி said...

@ ரம்மி

இன்று மாலை 3 மணிக்கு மேல் இது குறித்து எழுத உள்ளேன். சூழ்நிலைகள் மாறும் போது கள நிலைகள் மாறும். மேலும் சில நேரங்களில் நிலவும் சூரியனும் நேர் கோட்டில் சந்தித்தால் பூமிதாய்க்கு கிரகணம். அம்மாவுக்கு சொல்ல வேண்டியதை இன்று என் பதிவின் முகப்பில் சொல்லியுள்ளேன்.

Unknown said...

கிரகணம் ஏற்படுவதை, முன்கூட்டியே கணிக்கலாம் தலைவா!
அடுத்து வரவிருப்பது தி.மு.க வின் தேர்தல் அறிக்கை( பிச்சைப் பாத்திரம்!) பிறகு பாருங்கள், இனி சூரிய கிரகணமே!

Post a Comment